ஆசிய கோப்பை தொடருக்கான இறுதி ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ள நிலையில் யார் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என பார்க்கலாம்.
இலங்கை, பாகிஸ்தான் மோதல்!
துபாயில் இன்று நடைபெறும் ஆசிய கோப்பை தொடருக்கான இறுதி ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளனர். இந்த இரு அணிகளும் இதற்கு முன்னர் இறுதியாக நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தில் மோதி இலங்கை அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதில் இலங்கை அணி ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவரை 10 முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணி இதுவரை இரண்டு முறை மட்டுமே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மேலும் இலங்கை அணி வீரர்கள் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே நல்ல பார்மில் உள்ளனர். இதனால் இன்று நடைபெறும் போட்டியில் பல சாகச வேலைகளை இலங்கை அணி நிகழ்த்த வாய்ப்பு உள்ளது.
ஆனால் பாகிஸ்தான் அணி முகமது ரிஸ்வானை நம்பி உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. மேலும் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பெரும்பாலும் பந்து வீச்சை தேர்வு செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் எந்த அணிக்கு லக் அடிக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.