மருத்துவ சேர்ந்த மருத்துவ தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனேக்காவின் கொரோனா தடுப்பூசி ஆய்வு உலகளவிலும் முன்னணியில் மிகவும் மேம்பட்ட கட்டத்தில் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அஸ்ட்ராஜெனேக்காவின் கொரோனா தடுப்பூசி..!
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக உலகம் முழுவதும் 200 ஆராய்ச்சி திட்டங்கள் கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் உள்ளன. இதனையடுத்து 15 ஆராய்ச்சி திட்டங்கள் மனிதர்கள் மீதான பரிசோதை எட்டியுள்ளது.
இதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனேக்காவும் இணைத்து செயல் படுத்தும் கொரோனா தடுப்பூசி திட்டம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
நல்ல முடிவு கிடைக்க வாய்ப்பு..!
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இந்த தடுப்பூசி எந்த கட்டத்தில் உள்ளது மற்றும் அதில் முன்னேற்றத்தின் அடிப்படையில் பார்க்கும் போது அஸ்ட்ராஜெனேக்காவின் தடுப்பூசி தான் முதலிடத்தில் உள்ளது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியலாளர் சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்த ஆராய்ச்சியில் விரைந்து நல்ல முடிவு கிடைக்க வாய்ப்பிருப்பதாக அவர் கூறியுள்ளார்.