தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும், வரும் ஏப்ரல் 19ல் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் வாக்காளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் விரைந்து மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம், “வெளிமாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது.
“இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை கிடையாது”., இதுதான் காரணம்? தேர்தல் ஆணையம் உத்தரவு!!!
அதற்கு பதிலளித்த அவர், “இரண்டு இடத்தில் வாக்காளர் பெயர் இருக்கக்கூடாது என்பதற்காக, சொந்த மாநிலத்தில் பெயரை நீக்கிவிட்டு, இங்கே வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்து இருந்தால் சேர்த்திருப்போம். அதேபோல் இன்னொரு மாநிலத்திற்கு சென்று வாக்களிக்க இருப்பவர்களை, யாருமே தடுக்க மாட்டார்கள்.” என தெரிவித்துள்ளார்.