நாடு முழுவதும் மக்களவை தேர்தல் தேதிகள் வெளியிடப்பட்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7 என 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் டோல் ஜாத்ரா பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களும் உள்ளூர் விடுமுறையை அறிவித்து வருகிறது. இதையடுத்து தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக மகளிர் உரிமைத்தொகை வாங்க இன்னும் 3 மாதம் ஆகுமா?? தேர்தலால் வந்த சிக்கல்!!
அதாவது பொதுத் தேர்தல் வாக்குப்பதிவுக்காக சோனித்பூர், நாகோன், பிஸ்வநாத், லக்கிம்பூர், தேமாஜி, டின்சுகியா, கோலாகட், ஜோர்ஹட், சிவசாகர், திப்ருகர், மஜூலி மற்றும் சாரெய்டியோ ஆகிய மாவட்டங்களுக்கு, டோல் ஜாத்ரா உள்ளூர் விடுமுறை அறிவிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளனர். மேலும் தேர்தல் பணிகள் சீராக நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.