எதிர்வரும் உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் விளையாட உள்ளது.
ஒருநாள் உலக கோப்பை:
ஐசிசி சார்பாக, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒருநாள் உலக கோப்பை தொடர், நடப்பு வருடம் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவின் முக்கிய நகரங்களான அகமதாபாத், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, இந்தூர், தர்மசாலா, கவுகாத்தி, ராஜ்கோட், ராய்ப்பூர் மற்றும் மும்பை உள்ளிட்ட மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
10 அணிகள் பங்குபெற உள்ள இந்த தொடர், அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை 48 போட்டிகளை கொண்ட தொடராக அமைய உள்ளது. இதில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுடன் தென் ஆப்பிரிக்கா 8 வது அணியாக, உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள 2 இடத்திற்கு, மேற்கிந்திய தீவுகள், இலங்கை உள்ளிட்ட 9 அணிகள் தகுதி சுற்றில் மோத இருக்கிறது.
IPL-லில் தொடரும் தோனியின் லூட்டிகள்…, மீண்டும் தீபக் சஹரை அடித்த வீடியோ வைரல்!!
இந்த தகுதி சுற்றானது, ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், உலக கோப்பைக்கான முதல் யுத்தத்தை மேற்கிந்திய தீவுகள் தொடங்கி உள்ளது. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக முதல் இருதரப்பு சுற்றுப்பயணத்தை மேற்கிந்திய தீவுகள் அணி மேற்கொள்ள இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.