தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து மதுரை, கோவை மாநகரங்களிலும் மெட்ரோ சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் அண்மையில் நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மெட்ரோ பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் வழங்க உள்ளதாக வாட்சப் மற்றும் அதிகாரமற்ற இணையதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 2019 ம் ஆண்டு முதல் ஊதிய உயர்வு., ஜாக்பாட் அறிவிப்பு!!!
அதாவது “வேலை வாய்ப்பு இருப்பதாக வெளிவந்த தகவல் பொய்யானவை. மெட்ரோ நிறுவனத்தின் வேலைவாய்ப்பு செய்தி https://chennaimetrorail.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியாகும். இதுதவிர தமிழ், ஆங்கில நாளிதழ் மற்றும் வேலைவாய்ப்பு செய்தித்தாள்களிலும் வெளியாகும். சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த போலியான தகவலை யாரும் நம்ப வேண்டாம். இதனை பரப்பியவர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை செயல்பட்டு வருகிறது.” என தெரிவித்துள்ளனர்.