இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில், இங்கிலாந்து அணியை எதிர்த்து பங்களாதேஷ் அணியானது தங்களது 2வது போட்டியில் இன்று (அக்டோபர் 10) மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியானது பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் (140), ஜோ ரூட் (82), ஜானி பேர்ஸ்டோவ் (52) என அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Enewz Tamil WhatsApp Channel
இதனால், இங்கிலாந்து அணியானது 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 364 ரன்கள் குவித்து அசத்தியது. சற்று கடினமான இலக்கை துரத்த களமிறங்கிய பங்களாதேஷ் அணியில், தொடக்க வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பங்களாதேஷ் 227 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
உலக கோப்பையில் சதம் விளாசிய சீனியர் வீரர்…, குறைந்த இன்னிங்ஸில் படைத்த சாதனை விவரம் உள்ளே!!