அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை (OPS) நீக்குதல் உட்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். வழக்கு தொடர்ந்ததில், தீர்மானங்களுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். எனவே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தும், அங்கும் OPS மனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக அரசியல் விமர்சகர் தராசு ஷ்யாம் கூறுகையில், “ஒ.பன்னீர்செல்வத்தின் சட்டப் போராட்டம் வீண் தான். பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் கட்சி இருப்பது மறுக்க முடியாத உண்மை. எனவே அ.ம.மு.க. டி.டி.வி.தினகரன் போல, ஓ.பன்னீர்செல்வமும் தனி சின்னங்களை தேடுவதே சிறப்பு.” என கூறியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
பாஜகவில் இணைகிறாரா நடிகர் அர்ஜுன்?? அவரே தெரிவித்த கருத்து வைரல்!!