இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்து வருகின்றனர். இதற்கிடையில், பீகார் மாநிலத்தில் பயிற்சி மையங்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பள்ளிகளில் தகுதி உள்ளவர்களை பணி நியமனம் செய்து வருகின்றனர். அத்தகைய ஆசிரியர்கள், அரசு நடத்தும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே அரசு ஊழியர்களாக அந்தஸ்து பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு உயர்ந்தால், ஆசிரியர்கள் பெரும் ஊதியம் குறித்து பின்வருமாறு காணலாம்.
- 1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளமே ரூ.25,000 வரும். இத்துடன், அகவிலைப்படி, வீட்டுக் கொடுப்பனவு, CTA, மருத்துவ நிதி, ஓய்வூதிய நிதி என மொத்தமாக ரூ. 49 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.
- 9 மற்றும் 10 ஆம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.31,000-மாகவும், அகவிலைப்படி, வீட்டுக் கொடுப்பனவு உள்ளிட்டவைகளை சேர்த்து ரூ.49,630 வரை சம்பளம் கிடைக்க பெறும்.
- 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.32,000 த்துடன் அகவிலைப்படி, மருத்துவ நிதி, ஓய்வூதிய நிதி உள்ளிட்டவைகள் என மொத்தமாக ரூ.51,130 வரையிலும் சம்பளம் கிடைக்கும்.