தென்னிந்திய திரையில் முன்னணி நடிகையின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்த அனிமல் திரைப்படம் சமீபத்தில் திரையில் வெளியாகி 800 கோடிக்கு மேல் குவித்து வசூல் சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி NETFLIX ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படம் தொடர்பாக ராஷ்மிகா மந்தனா முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதாவது படத்தின் காட்சியில் கணவராக நடிக்கும் ரன்பீர், டிருப்தி டிம்ரியுடன் தூங்கியதால் அவர் கன்னத்தில் உண்மையாக அறைந்தேன் என்றும் அப்பொழுது என்ன செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அந்த காட்சி எடுத்து முடித்த பிறகு நான் உண்மையாகவே அழுதேன், அவரிடம் சென்று நான் இப்படி நடந்து கொண்டது சரியா நலமா இருக்கிறீர்களா என்று கேட்டுக் கொண்டே இருந்தேன் என கூறி தனது கருத்தை நிறைவு செய்தார் ராஷ்மிகா. இவரின் இந்த கருத்து இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அடிப்படை சம்பளமே ரூ.32,000…, ஆசிரியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்…, வெளியான நியூ அப்டேட்!!