நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2 வது இடத்தை எட்டியது.
டி20 உலக கோப்பை 2022:
நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 உலக கோப்பை போட்டியில், இங்கிலாந்து அணி இன்று கப்பா மைதானத்தில் போட்டியிட்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் கொடுத்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில், அலெக்ஸ் 52 ரன்களில் வெளியேற, இவரை தொடர்ந்து வந்த, மொயின் அலி (5), லிவிங்ஸ்டோன் (20), ஹாரி புரூக் (7) என அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். ஒரு புறம் அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 7 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 73 ரன்கள் அடித்து அசத்தினர். இதனால், இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எதிரணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
ஆகாயத்தில் பறந்த ஸ்கோர் அப்டேட்.., உணர்வுபூர்வமான நடவடிக்கையால் நெகிழ்ந்த ரசிகர்கள்!!
இந்த இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில், கேன் வில்லியம்சன்(40) மற்றும் க்ளென் பிலிப்ஸ் (62) ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். ஆனாலும், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5 புள்ளிகளுடன் குரூப் 1 ல் 2வது இடத்தை பிடித்தது.