நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. ஆனால் இந்த சலுகைகள் அனைத்தும் நேரடியாக ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்காமல் தகுதியற்றவர்களுக்கு கிடைப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் ரேஷன் அட்டையில் தகுதியற்றவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது.
எனவே இது தொடர்பாக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பலரது பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இப்போது மத்திய அரசு ரேஷன் கார்டு பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்களை மறுபடியும் சேர்க்க அறிவுறுத்தியுள்ளது. மேலும் ரேஷன் கார்டில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் உடனடியாக உணவு வழங்கல் துறைக்கு சென்று உங்களது பெயரை சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.