தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து, கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி நேற்று தேனி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தென்மேற்கு பருவமழை கர்நாடகா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் படிப்படியாக குறைந்து வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு பருவ மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை வருகிற 23ம் தேதி முதல் 25ம் தேதிகளுக்கு இடையே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.