இன்றைய காலகட்டத்தில் திருமண உறவில் ஈடுபடும் பல தம்பதியர்களும் பல்வேறு காரணங்களுக்காக விவாகரத்து வேண்டி நீதிமன்றங்களை நாடி வருகின்றனர். அந்த வகையில் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 89 வயது முதியவர் விவாகரத்து கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளார். 1963ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், 1984ல் சென்னையில் ராணுவ வீரராக பணிபுரியும் போது திருமண உறவில் விரிசல் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
முதியவரின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 82 வயதான அவரது மனைவி, “எனது கணவரை கவனித்து கொள்ள தயாராக உள்ளேன். விவாகரத்து பெற்றவராக சாவதற்கு எனக்கு விருப்பமில்லை.” என கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து முதியவரின் விவாகரத்து வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.