![மெட்ரோ ரயில் பயணிகளே..., பண்டிகை காலத்திற்கான சிறப்பு சேவைகள்..., அறிவிப்பை வெளியிட்ட கொல்கத்தா நிர்வாகம்!! மெட்ரோ ரயில் பயணிகளே..., பண்டிகை காலத்திற்கான சிறப்பு சேவைகள்..., அறிவிப்பை வெளியிட்ட கொல்கத்தா நிர்வாகம்!!](https://enewz.in/wp-content/uploads/2023/10/fff-met-696x392.jpg)
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில மக்களும், வருகின்ற துர்கா பூஜையை ஆண்டுதோறும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். கிட்டத்தட்ட 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த துர்கா பூஜைக்காக, பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த பண்டிகை காலத்திற்கு மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட விரும்புவர் என்பதால், கொல்கத்தா மெட்ரோ தங்களது சேவைகளை விரிவுபடுத்தி உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, வடக்கு-தெற்கு நடைபாதையில் சப்தமி, அஷ்டமி மற்றும் நபமி ஆகிய நாட்களில் இரவு நேர சேவையையும், கிழக்கு-மேற்கு வழித்தடத்தில் நள்ளிரவு வரையும் மெட்ரோ சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20 நிமிடத்திற்கு ஒரு முறை என காலை 11:55 முதல் இரவு 8:00 மணி வரை 48 சேவைகள் கிழக்கு-மேற்கு நடைபாதையில் இயக்கும் என கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழக மக்களே…, தாறுமாறாக எகிறும் வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??