நாட்டில் குறிப்பிட்ட இந்த அரசு ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகள் அனைத்தும், ரத்து செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு அறிவிப்பு:
வடகிழக்கு மாநிலங்களில் பணிபுரிந்து வரும் அனைத்திந்திய சேவை அதிகாரிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐ எஃப் எஸ் ஆகிய பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து சிறப்பு சலுகைகளும் ரத்து செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதுகுறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறையால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், நாகாலாந்து, அசாம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பணிபுரியும் சேவை அதிகாரிகளுக்கு தங்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 25% சிறப்பு படித்தொகை கடந்த 2009 ல் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இதற்கு அனுமதி இல்லை – இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது! பகிரங்க எச்சரிக்கை!!
இனி இந்த கூடுதல் படித்தொகையும் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.