தமிழகத்தில் சில நாட்களாக நடந்து வரும், சட்டவிரோத செயல்கள் இன்னும் தொடர்ந்தால் மோசமான நடவடிக்கை பாயும் என, மாநில காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவல்துறை எச்சரிக்கை :
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, மோசமான சட்டவிரோத வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள பாஜக தலைமை அலுவலகங்களில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டு வருகிறது. இன்று கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள பாஜக அலுவலகங்களில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதற்கு எதிராக மாநிலம் முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதனால், பொது அமைதி கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்தார்.
இந்தியாவில் 200 கோடியை தாண்டிய தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை – சுகாதாரத்துறை ரிப்போர்ட்!!
குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். தொடரும் இந்த வன்முறை சம்பவங்களால், போலீஸ் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.