தமிழ் சீரியல்களில் அம்மா பாத்திரத்தில் கலக்கி வரும், நடிகை லட்சுமி வாசுதேவன் கண்ணீருடன் கதறி அழும் வீடியோவை வெளியிட்டு, முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
நடிகை கோரிக்கை:
சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியல் மூலம், சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன். தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடரில், அம்மாவாக நடித்து அசத்தியிருந்தார். ஜீ தமிழில் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
பல முன்னணி சீரியல்களில் அம்மா பாத்திரங்களில் கலக்கி வரும் இவர், கதறி அழுத வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் லோன் ஆப் ஒன்றை டவுன்லோட் செய்ததால் தன் மொத்த வாழ்க்கையும் நாசமாய் போனதாக தெரிவித்தார்.
என்ன ஷிவானி இது.., இப்படி திம்சுகட்டை மாதிரி இருக்கீங்க.., டி-ஷர்ட்டில் பார்த்து சொக்கிப்போன இளசுகள்!!
என் போட்டோவை மார்ஃபிங் செய்து, அந்த ஆப்பில் உள்ள மர்ம நபர்கள் அனைவருக்கும் அனுப்பி விட்டனர், இதனால் தன் நிலை கேள்விக்குறியாகி விட்டது. இனிமே யாரும் இது போன்ற தேவையில்லாத ஆப்புகளை டவுன்லோட் செய்ய வேண்டாம் என்றும், எச்சரிக்கையுடன் இருங்கள் என்றும் கண்ணீருடன் பேசியுள்ளார். பிரபல சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட இந்த நிலை குறித்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.