அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நலனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநில சட்டசபையில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று ( நவ.30) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸுடம், ஆசிரியர் இல்லாத பள்ளி குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், “கடந்த ஆண்டு மாநிலத்தில் இருந்த 20,000 அரசுப்பள்ளிகளில் 3,500 இடங்களில் ஆசிரியர் இல்லாமலும், ஒரு ஆசிரியர் மட்டும் இருந்ததாகவும் இருந்தது. ஆனால் நடப்பாண்டில் ஆசிரியர் இல்லாத பள்ளிக்ளீன் எண்ணிக்கை 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2024 மார்ச் மாதத்திற்குள் ஆசிரியர் இல்லாத பள்ளி என்பதே இருக்காது.” என தெரிவித்துள்ளார். இதற்கு அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் மாநில அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக மக்களே.., ஆதார் கார்டில் இது கரெக்டா இருக்கானு பார்த்துக்கோங்க? இல்லனா சிக்கல் தான்?