2023 ஐசிசி ODI உலக கோப்பை தொடர் மிகுந்த விறுவிறுப்புக்கு மத்தியில் கடந்த நவம்பர் 19ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் தற்சமயம் அனைவரின் கவனமும் 2024 IPL தொடர் மேல் உள்ளது. அதாவது ஐபிஎல் 2024 மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் பல்வேறு கட்டங்களாக பொதுத் தேர்தல்கள் நடைபெற இருப்பதால் இத்தொடரை வேறு இடத்திற்கு நகர்த்த பிசிசிஐ திட்டம் வைத்து இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது.
மேலும் அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக இத்தொடரின் மினி ஏலம் துபாயில் வரும் டிசம்பர் 19ம் தேதி அரங்கேற உள்ளது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் இந்தியாவிற்கு வெளியே நடைபெறும் முதல் ஐபிஎல் ஏலம் இதுவாக அமையும். ஐபிஎல் வீரர்களை ஏலத்தில் பதிவு செய்ய இன்று (நவம்பர் 30) கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.