இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றிற்கு எதிரான தடுப்பூசியை ஒரு டோஸ் மட்டும் செலுத்திக்கொண்டால் போதும் மாஸ்க் போட தேவையில்லை என்று அரசு அறிவித்துள்ளது.
தடுப்பூசி:
இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் என்னும் உயிக்கொல்லி நோயினால் மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. தற்போது அனைத்து உலக நாடுகளிலும் மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சில நாட்டு அரசு பல பாதுகாப்பு நடவடிக்கைகளில் தளர்வுகளை அளித்து வருகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
அந்த வகையில் எந்த உலக நாட்டில் அதிக அளவு மக்கள் தடுப்பூசியை போட்டுளார்களோ அங்கு பொதுஇடங்களில் மக்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுபோல் தென்கொரிய அரசு ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூலை மாதம் முதல் கொரோனா தடுப்பூசியை ஓர் டோஸ் செலுத்தியவர்கள் பொதுஇடங்களில் மாஸ்க் அணிய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவில் ஒரே நாளில் 22 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை – சுகாதாரத்துறை தகவல்!!
மேலும் வருகிற ஜூன் மாதம் முதல் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அந்த நாட்டின் பிரதமர் கிம் பூ-க்யூம் தெரிவித்துள்ளார். மேலும் 70 சதவிகித முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்பு தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.