கடலூர் நெய்வேலியில் NLC நிறுவனம், 2வது சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பெருவாரியான நெல் வயல்கள் பாதிக்கப்படுவதால், விரிவாக்க பணியை நிறுத்த வேண்டும் என நிறுவனத்தின் நுழைவு வாயிலருகில் பா.ம.க.வினர் மற்றும் விவசாயிகள் இன்று (ஜூலை 28) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அப்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிர்வாகத்தை கண்டித்து பேசி கொண்டு, நிறுவனத்திற்குள் நுழைய முற்படுகையில் போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள், போலீஸ் வாகனத்தின் மேல் கற்களை வீசிபதில், வாகனங்களின் கண்ணாடி உடைந்ததோடு 6 போலீசாரின் மண்டைகளும் உடைந்தது. எனவே போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி நூற்றுக்கணக்கானோரை கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி உள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன், வியாழன் விடுமுறை? மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!!