கடந்த மாதத்தில் இருந்து கோடை வெயில் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த வெயிலின் சூட்டை தணிக்கும் விதமாக ஆங்காங்கே இருக்கும் சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. தற்போது ஆரம்பித்த தென்மேற்கு பருவ மழையின் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான மதுரை, கோவை, திண்டுக்கல், நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர், தென்காசி, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை கேட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.