மழை எச்சரிக்கை! இந்த பகுதி மக்கள் உஷார்.., வெளியான மாஸ் அறிவிப்பு!!!

0
மழை எச்சரிக்கை! இந்த பகுதி மக்கள் உஷார்.., வெளியான மாஸ் அறிவிப்பு!!!
தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக டெல்டா, உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 6ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். மேலும் இன்று ஒரு நாள் மட்டும் மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here