கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இந்த அரசாணையை தமிழக அரசு அமலுக்கு கொண்டு வராமல் காலம் தாழ்த்தியதால், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வேண்டும் என பல்வேறு போராட்டங்களை மருத்துவர்கள் சங்கங்கள் மேற்கொண்டு வந்தனர்.
பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தங்கள்.. A + கிரேடில் விராட், ரோஹித் & ஜடேஜா.. முழு விவரம் உள்ளே!!
மேலும் ஊதிய உயர்வுக்கான அரசாணையை அமல்படுத்த கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு மருத்துவர் ஜெயக்குமார் என்பவர் மனுத் தாக்கலும் செய்தார். இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், “இன்னும் 6 வாரங்களில் ஊதிய உயர்வு கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.