தமிழகத்தில் இப்போது அனைத்து பகுதிகளிலும் வடகிழக்குப் பருவ மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த ஏழு நாட்களுக்கு எந்தெந்த பகுதியில் மழை பெய்யும் என்பது குறித்து தெரிவித்துள்ளனர். அதன்படி தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதேபோன்று தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும். இதனால் இன்று ஒரு நாள் மற்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் தென்படலாம் என தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
முன்னணி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் புது தொடர்.., ஹீரோ யார் தெரியுமா? வெளியான தகவல்!!!