தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் புதுச்சேரி, காரைக்கால், தமிழகம் ஆகிய பகுதிகளின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேலையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோன்று இன்றும் நாளையும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் உறைபனி ஏற்படும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
SSC தேர்வர்களே.., தேர்வுக்கு ரெடியாயிட்டீங்களா?? அப்ப உடனே இத பண்ணுங்க!!!