தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த ஏழு தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகாலை லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. குமரிக்கடல், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., ஜனவரி 14 ஆம் தேதி வரை விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!