தென்மேற்கு பருவமழை ஆரம்பித்த நாளில் இருந்தே தமிழகம் உள்பட வட மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இப்படி விடாமல் பெய்யும் கனமழையால் வடமாநிலங்களில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் அவ்வப்போது மிதமான மழை முதல் கனமழை வரை சில மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆறு நாட்களுக்கான வானிலை விவரம் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 23ம் தேதி வரை மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பாரம்பரிய தொழிலாளர்களுக்கு ஜாக்பாட் திட்டம்., ரூ.1 லட்சம் கடனுதவி சலுகை அறிவித்த மத்திய அரசு!!!