தமிழகத்தில் புதிய தளர்வுகள் அறிவிப்பு.. உணவகங்கள், தேனீர் கடைகள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி!!!

0
தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம் ?? சுகாதாரத்துறை செயலர் கடிதத்தால் அச்சத்தில் பொதுமக்கள்!!
தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம் ?? சுகாதாரத்துறை செயலர் கடிதத்தால் அச்சத்தில் பொதுமக்கள்!!
தமிழகத்தில் ஏற்கனவே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தற்போது மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு, ஊரடங்கு ஜூலை 19 ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தற்போது அறிவித்திருக்கும் தளர்வுகளில் உணவகங்கள், தேனீர் கடைகள், அடுமனைகள், நடைபாதை கடைகள், இனிப்பு கார வகை விற்பனை கடைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 12 ஆம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
 
மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கும், துக்க நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மட்டும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் மாநிலங்களுக்கு இடையேயான தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபான கூடங்கள், திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here