நாட்டில் புதிதாக பரவி வரும் நியோ கோவ் வைரஸ் – விஞ்ஞானிகள் அறிவிப்பால் நொந்து போன மக்கள்!!

0

தென் ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து புதிதாக, நியோ கோவ் என்ற வைரஸ் மனிதர்களிடையே பரவி, அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக சீனாவின் வூகான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய வைரஸ்:

கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலக நாடுகள் அனைத்திற்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் முடிவுக்கு வருவதற்கு முன்பே, மீண்டும் தென் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து நியோ கோவ் என்ற வைரஸ் பரவி வருவதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் கடந்த  2012-ம் ஆண்டு பரவிய மெர்ஸ்-கோவ் வைரஸ் மற்றும் சார்ஸ்-கோவ் 2 வின் ஒருங்கிணைப்பாக இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த வைரஸ் முதன்முதலாக வவ்வால்களில் மட்டுமே காணப்பட்டதாகவும், தற்போது இது மனிதர்களிடம் பரவும் வகையில் உருமாற்றம் அடைந்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த வைரஸ், மனித உடலில் உள்ள செல்களில் கலந்து மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர். ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தலின் மத்தியில் விஞ்ஞானிகளின் இந்த அறிவிப்பால், அனைத்து உலக நாடுகளும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here