தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தாளை திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் முடிவடைய உள்ளது. இந்நிலையில் தேர்வுத்துறை இணை இயக்குனர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் விடைத்தாளை மதிப்பீடு செய்ய தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ் விடைத்தாளையும், ஆங்கில வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில விடைத்தாள்களையும் திருத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் இதில் எந்த ஒரு குளறுபடிகளும் ஏற்படக் கூடாது எனவும் எச்சரித்துள்ளனர். இதற்கு காரணம் என்னவென்றால் வெவ்வேறு ஆசிரியர்கள் திருத்துவதால் மதிப்பெண் பதிவிடுவதில் பல குளறுபடிகள் நிலவுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இது போன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
TNUSRB தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களா? இந்த புக் மெட்டீரியல் இருக்கா? மிஸ் பண்ணிடாதீங்க!!!