தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகைகளை பெற புதிதாக திருமணமானவர் மற்றும் இன்னும் சில புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருவது வழக்கம். இந்நிலையில் உணவு வழங்கல் துறை ஆணையர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் கடந்த ஆண்டு 2021 மே மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை மட்டும் கிட்டத்தட்ட 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அதன் பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்களும் தற்போது சரிபார்க்கப்பட்டு முடிவடைந்த நிலையில் 45,500 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புது ரேஷன் கார்டு விநியோகம் செய்தவுடன் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நிச்சயம் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது லோக்சபா தேர்தல் விரைவில் வர உள்ளதால் தமிழக அரசு இது குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளனர். இதனால் புதிதாக குடும்ப அட்டை பெற்ற அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
பொன்முடிக்கு MLA பதவி மீண்டும் கிடைக்குமா? சபாநாயகர் கொடுத்த விளக்கம்.. முழு விவரம் உள்ளே!!