தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் ‘கள்ளிப்பால் பெண்சிசு கொலைகள்’ – மதுரை உசிலம்பட்டியில் கொடூரம்..!

0

தமிழகத்தில் கள்ளிப்பால் கொடுத்து பெண்குழந்தைகள் கொல்லப்படும் சம்பவம் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்தது.  இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்து 1 மாதமே ஆன பெண் குழந்தையை அவர்களது பெற்றோரே கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தை கொன்று புதைப்பு..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த தம்பதி வைரமுருகன்-சௌமியா ஆகியோர்க்கு ஏற்கனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.  இந்நிலையில் அவர்களுக்கு இரண்டாவதாகவும் ஜனவரி 31ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.  இந்நிலையில் கடந்த மார்ச் 2ம் தேதி குழந்தை இறந்து விட்டதாக கூறி பெற்றோரே பிறந்து 1 மாதமே ஆன பெண் குழந்தையை வீட்டின் அருகில் புதைத்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரினால் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  அதில் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து பெற்றோரே கொன்று புதைத்து அம்பலமானது.  இதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

என்ன காரணம்..?

பெண் குழந்தைகள் கொல்லப்படுவதற்கு அவர்கள் வளர்ந்து திருமண வயதை எட்டும் போது பெற்றோர்க்கு அதிகப்படியான பணத்தேவைகள் ஏற்படுவதும், மேலும் வரதட்சணை மற்றும் சொந்த பந்தங்கள் முன் கவுரவத்துடன் வாழ்வது போன்ற காரணங்களே கூறப்படுகிறது.  எனவே இது குறித்து அரசு தீவிர விசாரணை நடத்தி இதற்கு ஒரு முடிவு ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை ஆக உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here