தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த தேர்வுகளில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க அரசு தேர்வுகள் இயக்ககம், பள்ளி கல்வித்துறை தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒருவேளை இந்த நடவடிக்கையை மீறி ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அவர்களிடம் அந்த இடத்திலேயே எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெற்று தேர்வு அறையைவிட்டு முதன்மை கண்காணிப்பாளரார் வெளியேற்றப்படுவார்.
ஆனால் அடுத்து வரும் பாட தேர்வுகளை வழக்கம்போல் எழுதிக் கொள்ளலாம். ஒரு வேலை விடைத்தாள்களை மாற்றிக் கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் வினாத்தாளை மாணவர்கள் வெளியே அனுப்பினால் அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுதுவதும் ரத்து செய்யப்படும். எனவே மாணவர்கள் இது போன்ற குற்றங்களை கருத்தில் கொண்டு தேர்வுகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ளனர்.