நாடு முழுவதும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ரேஷன் அட்டைகள் மூலம் பல சலுகைகள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு கரீப் கல்யாண் யோஜனா, அந்தயோதயா ஆகிய திட்டத்தின் கீழ் மாதந்தோறும் அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் மட்டுமல்லாமல் தகுதியற்றவர்களும் பயனடைந்து வருவதாக புகார்கள் வந்துள்ளது.
இதை தடுக்க இப்போது மாநிலம் முழுவதும் ரேஷன் தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டுகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பத்தினருக்கு அடுத்த மாதம் முதல் புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது இனி வரும் நாட்களில் அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் மாதம் தோறும் கைரேகை பதிவு செய்து ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும். ஒருவேளை குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவரின் கைரேகையை பதிவு செய்யாவிட்டாலும் அவர்களுக்கு இனி வரும் நாட்களில் ரேஷன் பொருட்கள் கிடையாது என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.