பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை மத்திய அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான கமல்நாத் செய்தியாளர்களிடம், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தினால் அரசியல் சாசனத்தை திருத்த வேண்டிய சூழல் ஏற்படும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும் இந்த திட்டத்திற்காக நாடாளுமன்ற இரு அவைகளிலும் சட்டம் நிறைவேற்றினால் போதாது என்றும், மாநில சட்டமன்றங்களாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இந்த திட்டத்தை பாஜக ஆளும் மாநிலங்கள் வேண்டுமென்றால் ஆதரிக்கலாம், பிற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் கருத்தால் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
10 நாளில் பளிச்சுன்னு உங்க முகம் ஜொலிக்கணுமா? இதை மட்டும் ட்ரை பண்ணுங்க., செம்ம ரிசல்ட் கிடைக்கும்!!