நெல்லை to மேட்டுப்பாளையம் வாராந்திர ரயில் சேவை மீண்டும் நீட்டிப்பு., இந்த தேதி முதல்? ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
நெல்லை to மேட்டுப்பாளையம் வாராந்திர ரயில் சேவை மீண்டும் நீட்டிப்பு., இந்த தேதி முதல்? ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நெல்லை to மேட்டுப்பாளையம் இடையே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (வ.எண். 06030) சேவை, கடந்த மாதத்துடன் நிறைவு பெற்றது. இந்த ரயில் சேவையை மீண்டும் நீட்டிக்க வேண்டும் என தென்மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன் அடிப்படையில் வருகிற 7 ஆம் தேதி முதல் மே 26 ஆம் தேதி வரை நெல்லை to மேட்டுப்பாளையம் வழித்தடங்களில் வாராந்திர சிறப்பு ரயில் சேவை வழங்கப்படும் என சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் வந்த புது சிக்கல்.., தேர்தலுக்கு பின் வரவிருக்கும் அதிரடி மாற்றம்!!!

அதன்படி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நெல்லையிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 07.30க்கு மேட்டுப்பாளையம் செல்லும். மறுமார்க்கமாக திங்கட்கிழமை மேட்டுப்பாளையத்திலிருந்து இரவு 07.45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.45க்கு நெல்லை வந்தடையும் என தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here