மத்திய அரசு நடத்தக்கூடிய உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு பாடத்திட்டத்தை கடைசி நேரத்தில் மத்திய அரசு மாற்றியதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாடத்திட்டம் மாற்றம்:
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு நீட் என்ற பெயரில் மத்திய அரசு ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு பாடத்திட்டத்தில் கடைசி நேரத்தில் மத்திய அரசு மாற்றத்தை கொண்டு வந்தது.
அதை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள், இது, பொது மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு சாதகமான செயல் எனக் கூறி அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது அதிகாரத்தில் இருந்து கொண்டு இளம் மருத்துவ மாணவர்களின் வாழ்க்கையை கால்பந்தாக மாற்றி எட்டி உதைக்கும் செயல் என்றும், கடைசி நேரத்தில் பாடத்திட்டத்தை மாற்றியது ஏன்? என்றும் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்