தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த விரிவான அறிக்கையை நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி வெளியிட்டுள்ளது. அதில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கை:
சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடந்தது. இந்த நீட் தேர்வு மதிப்பெண் பயத்தால் தமிழகத்தில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். பல அரசியல் கட்சி தலைவர்களும் இது போன்ற முடிவை எடுக்கவேண்டாம் என மாணவர்களை வேண்டி கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் நீட் தேர்வு தொடர்ந்தால் தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு மோசமாக பாதிக்கப்படும் என்றும் விடுதலைக்கு முந்தைய நிலைக்கு செல்லும் சூழல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நீட்தேர்வு, அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு கடினமானதாகவும், ஆங்கில வழியில் பயில்வோருக்கு சாதகமானதாகவும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்