திருமணத்துக்கு பின் தொடர்ந்து சறுக்கலை சந்திக்கும் நயன்தாரா – கைவிட்டு போன பிரமாண்ட படத்தின் வாய்ப்பு!!

0
திருமணத்துக்கு பின் நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு - பிரபல நிறுவனத்தின் வாய்ப்பால் அடித்த ஜாக்பாட்!!

நடிகை நயன்தாரா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படத்தின் 2ம் பாகம் தயாராகி வரும் நிலையில், இதில் நயன் நடித்த வேடத்தில் வேறு ஒரு நாயகி கமிட் செய்யப்பட்டுள்ளார்.

நாயகி மாற்றம்:

ரஜினி நடிப்பில், இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் உருவாகி, கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படத்தின் 2ம் பாகம் குறித்த அறிவிப்பு 17 ஆண்டுகளுக்குப் பின் தற்போது வந்துள்ளது. இந்தப் படத்தில் நடிக்க நடிகர் ரஜினி விரும்பாததால், அதற்கான வாய்ப்பு நடிகர் ராகவா லாரன்ஸிடம் சென்றது.

அதேபோல் இந்த படத்தில், விஜயகுமார் பேத்தியாக துர்கா கதாபாத்திரத்தில் நடித்த நயன்தாரா, இந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , தற்போது இந்த பாத்திரத்தில் மகிமா நம்பியார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் தமிழில் சாட்டை படத்தில் அறிவழகியாக நடித்து, மிகப்பெரிய அளவில் பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று மைசூரில் பிரம்மாண்டமாக தொடங்கி உள்ள நிலையில், விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகை நயன்தாராவுக்கு தமிழில் எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால், 35 வயதான அவர் தொடர்ந்து பாலிவுட்டிலேயே நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here