இந்தியாவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
நல்லாசிரியர் விருது:
இந்தியாவில் ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதி உடைய ஆசிரியர்கள் வரும் ஜூலை 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. அதாவது, 2019 ஏப்ரல் 30ம் தேதி வரை பணியாற்றியவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டம் – நிர்மலா சீதாராமன்..!
தகுதி உடைய ஆசிரியர்கள் mhrd.gov.in என்கிற இணையதளத்தில் தங்களது விபரங்களை பதிவிட்டு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்பவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது என கூறப்பட்டு உள்ளது.