‘ஆட்சியை கவிழ்த்தவர்களுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்’ – நாராயணசாமி காட்டம்!!

0

தற்போது புதுச்சேரியில் பெரும்பான்மையை இழந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். பின்பு பேட்டியாளர்களை சந்தித்து பேசிய நாரயணசாமி மிக காட்டமாக பேசியுள்ளார்.

புதுசிசேரி:

கடந்த சில நாட்களாகவே புதுச்சேரியில் அரசியல் நிலை மிக மோசமாக இருந்து வருகிறது. மேலும் ஆளும் கட்சி எம்எல்ஏகளும் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் நாராயணசாமி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது. மேலும் மத்திய அரசுக்கும் நாராயணசாமி அரசுக்கும் பல பிரச்சனைகள் நிலவி வந்தது. இந்நிலையில் நாராயணசாமி நம்பிக்கை முறையில் வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதனை சபாநாயகர் அறிவித்தார். இதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு சென்ற நாராயணசாமி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாராயணசாமி கூறியதாவது, புதுச்சேரி அமைச்சரவையை ராஜினாமா செய்துள்ளோம்.

‘சித்தி 2’ தொடரில் ராதிகாவுக்கு பதில் இவர் தான் நடிக்கிறாராம் – இணையத்தில் கசிந்த தகவல்!!

மேலும் நியமன எம்எல்ஏகளே ஆட்சியை கவிழ்த்ததால் அவர்களுக்கு மக்கள் கட்டாய முறையில் தண்டனை கொடுப்பார்கள். மேலும் பாஜக, என் ஆர் காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கும் மக்கள் கட்டாய முறையில் தண்டனை கொடுப்பார்கள் என்று காட்டமாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here