உலக அளவில் பலதரப்பட்ட மக்களும் விரும்பும் அசைவ உணவாக சிக்கன் உள்ளது. அதுவும் ஞாயிறு கிழமை என்றால் சொல்லவே வேண்டாம் அனைத்து பகுதி கறிக்கடைகளும் களை கட்டும். இந்நிலையில் “இன்று ஒருநாள் மட்டும் ஒரு கிலோ சிக்கன் வாங்கினால் அரை கிலோ இலவசம்” என கடை உரிமையாளர் விளம்பரப்படுத்தி உள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பட்டினம் சாலையில் SS கோழிப்பண்ணை புதிதாக இன்று (ஜனவரி 29) திறக்கப்பட்டுள்ளது. எனவே கடையை பிரபலப்படுத்த சுற்றுவட்டாரங்களில் ஸ்பெஷல் ஆஃபர் என விளம்பரம் செய்துள்ளார். ஒரு கிலோ சிக்கன் ரூ.150 முதல் ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்படுவதால் விளம்பரத்தை பார்த்து அதிகாலை முதல் பொதுமக்கள் கூட்டம் ராசிபுரம் பட்டினம் முழுக்க நிரம்பியுள்ளது.
இதனால் கடை திறக்கப்பட்டு 3 மணி நேரத்தில் 600 கிலோ சிக்கன் விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், வாடிக்கையாளர்கள் இருக்கையில் அமர்ந்து வாங்குவதால் இதுவரை 3 டன் (3000 கிலோ) மேலாக விற்பனை செய்துள்ளதாக கடை உரிமையாளர் கூறியுள்ளார். இந்தக் கடையின் அதிரடி ஆஃபரால் அந்தப் பகுதி முழுவதும், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.