தல அஜித் வீட்டிற்கு வெடுக்குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் – தீவிர விசாரணையில் போலீசார்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தல அஜித்தின் வீட்டில் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

அஜித்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் அஜித்குமார். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நிலைத்துள்ளார் என்றே சொல்லலாம். தமிழ்நாட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரில் இவரும் ஒருவர். அமராவதியில் ஆரம்பித்து தற்போது வலிமை வரை ரசிகர்களுக்கு அசத்தலான படங்களையே கொடுத்து வருகிறார்.

இவர் எந்த நிகழ்ச்சிக்கும் சென்றதுமில்லை, கலந்து கொண்டதுமில்லை. சில நாட்களுக்கு முன்பு கூட இவர் ஆட்டோவில் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது. எவ்வளவு தான் பெரிய ஆளாக இருந்தாலும் இவரிடம் அனைவர்க்கும் பிடித்தது அடக்கம் தான்.

இப்படி இருக்க தற்போது அஜித்தின் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மிரட்டல் விடுத்த மர்ம நபர் பற்றி கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த செய்தியை கேட்ட தல ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here