கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ.7 கோடி பரிசா?? அதிர்ச்சியளித்த இளம்பெண்!!

0

கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதனால் அதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து நாடுகளும் முயற்சி செய்து வந்த நிலையில் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 22 வயது இளம்பெண் 7 கோடி பரிசுத்தொகை பெற்றுள்ளார்.

7 கோடி பரிசு:

கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என மாறி மாறி பரவி வருவதனால் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. இதனை தடுக்கவும் கட்டுக்குள் கொண்டு வரவும் உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.

மேலும் நோய்பரவும் விகிதத்தை குறைப்பதில் தடுப்பூசி முக்கியபங்காற்றி வருகிறது. எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி மக்களிடையே எடுத்து கூற பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் சினிமா பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படத்தை ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அதே போல் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு குழுக்கள் முறையில் பரிசு என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் 22 வயது இளம் பெண் 7 கோடி பரிசு பெற்றது அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here