பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்து ரூபா ஸ்ரீயின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா சௌந்தர்யா
பாரதி கண்ணம்மா சீரியல் இந்த அளவிற்கு பெயரும் புகழும் பெற்றதற்கு முக்கிய காரணமே பெண்களுக்கு நாட்டில் நடக்கும் கொடுமைகளை காட்டுவதால் தான். இந்த சீரியலில் காட்டப்படும் பல ஸ் சம்பவங்கள் நாட்டில் பல மூலைகளில் நடந்து வருகிறது.
ஒரு பெண் அடிபணிந்து போனால் என்ன நடக்கும் என்பதையும் எப்படி எட்டி மிதிக்கிறார்கள் என்றும் இந்த சீரியல் அப்பட்டமாக காட்டுகிறது. இதனால் தான் இந்த சீரியலுக்கு இவ்வளவு மவுசு.
கண்ணம்மா போல தைரியமாக இருக்க வேண்டும், கண்ணம்மா போல வீரமாக இருக்க வேண்டும் என்று உதாரணமாக சொல்லும் அளவிற்கு இந்த சீரியல் வளர்ந்துள்ளது. மேலும் மருமகளுக்காக போராடும் மாமியார்களையும் பார்ப்பது கடினம் தான்.
அந்த வகையில் தான் இந்த சீரியலில் சௌந்தர்யா கதாபாத்திரம் அனைவர்க்கும் பிடித்து போனது. சௌந்தர்யா இந்த இந்த கதையின் முக்கிய அம்சம் என்றே சொல்லலாம். இவர் இந்த சீரியலுக்கு முன்பே பல படங்களில் நடித்துள்ளார். ரூபா ஸ்ரீயாக ஏற்கனவே இவர் நம் மனதை கொள்ளைகொண்டவர் தான்.
தற்போது வரையிலும் இவரது அழகும், இளமையும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது வெள்ளை சேலையில் முரட்டு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.