கல்லூரி மாணவியை காதலன் ரயிலில் தள்ளிவிட்ட விவகாரம் – ட்விட்டரில் கொந்தளித்து பதிவிட்ட விஜய் ஆண்டனி!!

0
சமீபத்தில் கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷை கண்டித்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி குரல் எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷை கண்டித்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி குரல் எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷை கண்டித்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி குரல் எழுப்பியுள்ளார்.

விஜய் ஆண்டனி:

தற்போது சென்னை நகரத்தை புரட்டி போட்ட சம்பவம் என்றால் அது கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொன்ற காதலனை பற்றி தான். சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், அதே பகுதியை சேர்ந்தவர் தான் சத்யா. இவர் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் சத்யா தாய்க்கு தெரிய வந்துள்ளது. தாய் கொடுத்த அட்வைஸால் சதீஷிடம் ஒரு வருடமாக பேச்சை நிறுத்தி கொண்டார் சத்யா.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் சத்யாவிடம் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். வழக்கம் போல் அக்டோபர் 13ம் தேதி பரங்கிமலை ரயிலில் நிலையத்தில் கல்லூரிக்கு செல்ல நின்று கொண்டிருந்த சத்யாவிடம் சதீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மாணவி சத்யா பிடி கொடுத்து பேசாததால் ஆத்திரத்தில் அவரை ஓடும் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்து தப்பி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தமிழகத்தில் 20% தீபாவளி போனஸ்? ரூ.10,000 முன்பணம்.,குவியும் கோரிக்கை – விரைவில் குட் நியூஸ்!!

இந்நிலையில் சதீஷை எதிர்த்து பொதுமக்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கோபத்துடன் ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் 10 வருடங்களுக்கு பின்னர் தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, இப்போதே அந்த மாணவியை கொன்ற மாதிரி ஓடும் ரயிலில் தள்ளிவிடுங்கள் என்று கொந்தளித்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here