இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்ற வீரர்கள் போன்று எந்த வித ஆர்பரிப்பும் இல்லாமல் அவரது ஓய்வு முடிவை அறிவிப்பார் என முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
எம். எஸ் தோனி..!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை ஒருநாள் தொடருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ளார். இந்நிலையில் ஐபிஎல் சீசன் 2020 ல் சிறப்பாக விளையாடினால் தோனிக்கு டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்தனர். தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கவாஸ்கர் அறிக்கை..!
இந்நிலையில், ஏப்ரல் 15 ம் தேதிக்குள் நிலைமை கட்டுக்குள் வர வாய்ப்பில்லை. இதனால் ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படலாம். இதனால் தோனி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை. டி20 உலக கோப்பையில் தோனி விளையாடுவதை நான் பார்க்க விரும்பினேன். தற்போதுள்ள நிலையில் அது நடக்க வாய்ப்பில்லை எனவும்,
எம்எஸ் தோனி மற்ற வீரர்களை போன்று மிகப்பெரிய அளவில் ஓய்வு முடிவை அறிவிக்கமாட்டார். அவர் எந்தவித ஓசையின்றி அமைதியான முறையில் ஓய்வு பெறுவார் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |