தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சிலா மாவட்டத்தை சேர்ந்த மாமியார் ஒருவர் தனது கொரோனா தொற்று மருமகளுக்கு பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை கட்டிப்பிடித்து இந்த தொற்றை பரப்பியுள்ளார். அந்த மருமகளின் கணவரும் உடன் இல்லாத நிலையில் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் நடந்தேறியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அந்த பெண்ணுக்கும் அவரின் மாமியாருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனைகள் இருந்து வந்துள்ளன. அவற்றையெல்லாம் சகித்து கொண்டு அவர் மாமியாருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார் இந்நிலையில் மாமியாருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் வீட்டிலையே தன்னை தனிமைபடுத்திக் கொண்டிருக்கிறார்.
தொற்றின் காரணமாக மருமகளும் மாமியாரிடம் இருந்து விலகியே இருந்திருக்கிறார்.இது பிடிக்காத மாமியார் பாசம் காட்டுவது போல் நடித்து அவ்வப்போது தனது மருமகளை கட்டி கட்டிப்பிடித்து அவருக்கும் தொற்றை பரப்பியுள்ளார் அதேப்போல் தன் பேரக் குழந்தையை கட்டிப்பிடித்து உள்ளார். இச்செயல் காரணமாக மருமகளும் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இதையே ஒரு காரணமாக வைத்து மருமகளை வீட்டை விட்டு துரத்தியும் உள்ளார். அந்த பெண்ணின் கணவர் ஒடிசாவில் ஒப்பந்த ஓட்டுநர் என்பதால் அவரின் துணையும் இன்றி தன்னுடைய சகோதரியின் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளதாக அந்த பெண் உருக்கமுடன் கூறியுள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!